போலி என்கவுண்டர்: ஆதாரங்களுடன் ஜாமியா மில்லியா ஆசிரியர்கள்! ~ திராவிட முஸ்லிம்

Saturday, February 21, 2009

போலி என்கவுண்டர்: ஆதாரங்களுடன் ஜாமியா மில்லியா ஆசிரியர்கள்!



ஜாமியா மில்லியா மாணவர்களை டில்லி பாட்லா ஹவுஸில் வைத்து காவல்துறை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஜாமியா மில்லியா கல்லுரியின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இவை, டில்லி என்கவுன்டர் குறித்து காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு எதிரானவைகளாகும்.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையினை காவல்துறை இதுவரை வெளியிடாததற்கானா காரணம் என்ன என்றும் ஏதாவது உண்மைகளை மறைத்து வைப்பதற்காகவே காவல்துறை அதனை வெளியிடவில்லையா? என்றும் அவர்கள் வெளியிட்ட அறிக்கை கேட்கிறது.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் குறித்த காவல்துறையின் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள், வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள், இஐயல்லாத சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சேகரித்த ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தயாராக்கிய 58 பக்கங்கள் அடங்கிய, "பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்: விடையிலா கேள்விகள்" என்ற தலைபில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இக்கேள்விகள் உள்ளடங்கியுள்ளன.

"போலி என்கவுண்டரில் தீவிரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரியின் உடலில் துப்பாக்கி ரவைகள் எப்பக்கமிருந்து துளைத்தன என்ற விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் உடலை முதலில் கொண்டு சென்ற ஹோலி ஃபேமிலி மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், அவ்வுடலில் ஆதாரங்கலை அழித்துள்ளதாக, பிரேத பரிசோதனை செய்த ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளதாக" அறிக்கை கூறுகிறது.

என்கவுண்டர் தொடர்பாக நீதிபதி தலைமையிலான விசாரணை வேண்டும் என்ற தேசிய மனித உரிமை கழகத்தின் கட்டளைக்கு எதிரான நிலைபாட்டை டில்லி லெப்டினன்ட் கவர்னர் எடுத்ததாகவும் அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.
- இந்நேரம்

No comments: