அஜ்மல் கசாப் க்கு வக்கீல் கிடைத்தார் ~ திராவிட முஸ்லிம்

Tuesday, April 7, 2009

அஜ்மல் கசாப் க்கு வக்கீல் கிடைத்தார்


மும்பை தாக்குதலில் ஈடுப்பட்ட அஜ்மல் கசாப் வழக்கில் ஆஜராவேன் என அவருக்காக நியமிக்கப்பட்ட பெண் வக்கீல் அஞ்சலி வாக்மாரே அறிவித்துள்ளார். அஜ்மல் கசாப் தரப்பில் ஆஜராக நியமிக்கப்பட்டார் அஞ்சலி வாக்மாரே. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டில் சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள் . இந்த சம்பவத்தின் எதிரொலியாக அஞ்சலி வழக்கில் இருந்து விடுபடுவார் என பரபரப்பு செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அஞ்சலி கோர்ட்டில் தனது முடிவை அறிவிக்க அவகாசம் கேட்டார். அவரது முடிவு இன்று வெளியாகும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் வழக்கில் ஆஜராக சம்மதம் தெரிவித்துள்ளார் . கோர்ட்டில் அவர் தான் வழக்கில் ஆஜராக தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் சிவசேனா தொண்டர்கள் இவருக்கு கொளை மிரட்டல் விடுத்தும், தன் உயிருக்கு என்ன ஆபத்து நெர்ந்தாலும் தான் இந்த வழக்கை ஆராயப்போவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மகாராஷ்டிரா அரசு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி வாக்மாரே மும்பை காவல்துறை கமிஷனரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது .

No comments: